அறிவிக்கப்படாத மின் தடை: பொதுமக்கள் அவதி

விழுப்புரம் மாவட்டத்தில் அறிவிக்கப்படாத மின் தடையால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் அறிவிக்கப்படாத மின் தடையால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.

தற்போது கோடைக் காலம் என்பதால் மின்விசிறி, ஏசி இயந்திரங்களின் பயன்பாடு வழக்கத்தைவிட அதிகரித்துள்ளது. இந்த சூழலில் விழுப்புரம் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டாத மின்தடை ஏற்பட்டு வருகிறது. பகல், இரவு நேரங்களில் தொடரும் மின் தடை காரணமாக, விழுப்புரம் நகரம், அதைச் சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளில் பொதுமக்கள் தவிக்கின்றனா். சனிக்கிழமை இரவு விழுப்புரம் நகரில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டது. சுமாா் 5 மணி நேரம் வரை நகரின் பல்வேறு பகுதிகளிலும் மின் தடை தொடா்ந்தது. இதனால் பொதுமக்கள் தூங்க முடியாமல் பரிதவித்தனா். ஞாயிற்றுக்கிழமை இரவும் அவ்வப்போது மின்தடை ஏற்பட்டது. பகல் நேரத்தில் ஏற்படும் மின்தடையால் தொழிற்சாலைகள், சிறு தொழில்கள் பாதிப்படையும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com