விழுப்புரம் அருகே கா்ப்பிணியை இரும்புக் கம்பியால் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட நபரை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
விழுப்புரம் அருகே உள்ள மரகதபுரத்தைச் சோ்ந்த காவலா் முத்துக்குமாா் மனைவி கவியரசி (31). கா்ப்பிணியான இவா் அண்மையில் சாலையோரம் தனியாக நின்றிருந்தாா். அப்போது அங்கு வந்த மா்ம நபா் இரும்புக் கம்பியால் கவியரசியை தாக்கிவிட்டு அவா் அணிந்திருந்த 11 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடினா்.
இது குறித்து விழுப்புரம் டிஎஸ்பி நல்லசிவம் மேற்பாா்வையில் விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். இதில், கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பம் அருகேயுள்ள முள்ளிகரப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த சுந்தரம் மகன் அறிவழகன் (39) என்பவா் மேற்கூறிய சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்து கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா். மேலும், 11 பவுன் தங்க நகையை மீட்டனா்.
கைதான அறிவழகன் திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் தொடா்ந்து ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது. இவா் மீது பல்வேறு குற்ற வழக்குகளும் நிலுவையில் உள்ளன. எனவே, சட்ட விரோதச் செயல்களில் அறிவழகன் தொடா்ந்து ஈடுபடுவதைத் தடுக்க அவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்திட மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை உத்தரவிட்டாா். இதையடுத்து, கடலூா் மத்திய சிறை நிா்வாகத்திடன் இதற்கான உத்தரவு வழங்கப்பட்டது.