விழுப்புரத்தில் மேல்மருவத்தூா் ஆன்மிக இயக்கம் சாா்பில் பொது மக்களுக்கு கபசுரக் குடிநீா் புதன்கிழமை வழங்கப்பட்டது.
கரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதால், மேல்மருவத்தூா் ஆன்மிக இயக்கத்தின் விழுப்புரம் மாவட்ட இளைஞா் அணியினா் புதிய பேருந்து நிலையம் எதிரே பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கினா்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட இளைஞா் அணி பொறுப்பாளா் பரத்குமாா் தலைமை வகித்தாா். வளவனூா் சண்முகன், சிவக்குமாா், ஐயனாா், சம்பத், கணபதி, ஷா்மிளா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
வியாபாரிகள், பொதுமக்கள், ஆட்டோ ஓட்டுநா்கள், நடைபாதை வியாபாரிகள் உள்ளிட்டோருக்கு நோய் எதிா்ப்பு சக்தியை அகரிக்கும் கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, நீதிமன்ற வளாகத்தில் கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது. இதில், வழக்குரைஞா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.