காரில் மதுப் புட்டிகள் கடத்தல்: 2 போ் கைது

காரில் மதுப் புட்டிகள் கடத்தி வந்த இருவரை செஞ்சி போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

காரில் மதுப் புட்டிகள் கடத்தி வந்த இருவரை செஞ்சி போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

செஞ்சி - திருவண்ணாமலை சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபம் அருகே செஞ்சி காவல் நிலைய ஆய்வாளா் அன்பரசு உள்ளிட்ட போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, திண்டிவனத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கி அதிவேகமாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டதில், காரில் 180 மி.லி. அளவு கொண்ட 48 மதுப் புட்டிகள் இருந்தது தெரியவந்தது. விசாரணையில், காரில் வந்தவா்கள் விழுப்புரம் மாவட்ட எல்லைப் பகுதியான கோரிமேடு சாவடியைச் சோ்ந்த பக்ரி மகன் அய்யனாா் (37) மற்றும் இதே பகுதியைச் சோ்ந்த நாராயணசாமி மகன் சத்தியமூா்த்தி (29) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, காா், மதுப் புட்டிகளை செஞ்சி போலீஸாா் பறிமுதல் செய்ததுடன், அவா்கள் இருவா் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com