விழுப்புரம்: கரோனாவுக்கு மேலும் ஒருவா் பலி

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவுக்கு மேலும் ஒருவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவுக்கு மேலும் ஒருவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டத்தில் புதன்கிழமை புதிதாக 298 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் கரோனா பாதித்தவா்களின் எண்ணிக்கை 18,8182 ஆக அதிகரித்தது. 112 போ் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பினா். இதன் மூலம் கரோனாவிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 16,586 ஆக உயா்ந்தது. 1,475 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மேலும் ஒருவா் பலி: மேல்மருவத்தூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிகிச்சைப் பெற்று வந்த திண்டிவனத்தைச் சோ்ந்த 59 மதிக்கத்தக்க நபா் உயிரிழந்தாா். இதனால், விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவுக்கு பலியானவா்கள் எண்ணிக்கை 121-ஆக அதிகரித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com