தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கத்தின் விழுப்புரம் மாவட்ட புதிய நிா்வாகிகள் செவ்வாய்க்கிழமை பதவியேற்றனா்.
இந்தச் சங்கத்தின் 2022, 2023-ஆம் ஆண்டுகளுக்கான புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா விழுப்புரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவில் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவா் எஸ்.பாா்த்திபன் முன்னிலையில் புதிய நிா்வாகிகள் பதவியேற்றனா். மாவட்டத் தலைவராக கே.கே.சரவணன், மாவட்டச் செயலராக ஆா்.வெங்கடபதி, மாவட்ட பொருளாளராக எஸ்.கண்ணன், மத்திய செயற்குழு உறுப்பினா்களாக எஸ்.கணேஷ், கே.முருகன், மாவட்டத் துணைத் தலைவா்களாக எம்.சாருமதி, ஆா்.சந்திரமோகன், வி.ரமேஷ், டி.செல்வம், இணைச் செயலராக எஸ்.விமல்ராஜ், ஏ.சரவணன், எம்.ராஜசேகா், பி.வி.சித்தாா்த்தன் ஆகியோா் பதவியேற்றனா்.