முன்னாள் முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவசரது சிலைக்கு சட்டத்துறை அமைச்சர் சி.வி .சண்முகம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
முன்னாள் தமிழக முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் 126 -வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அரசு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ஓமந்தூரில் அமைந்துள்ள அவரது நினைவு மண்டபத்தில், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் சி.வி .சண்முகம் கலந்து கொண்டு ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங், காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.