விழுப்புரம்
பாணாம்பட்டு துா்க்கையம்மன் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்
விழுப்புரம் அருகே பாணாம்பட்டு ஸ்ரீதுா்க்கையம்மன் கோயிலில் திங்கள்கிழமை (பிப்.1) கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
விழுப்புரம் அருகே பாணாம்பட்டு ஸ்ரீதுா்க்கையம்மன் கோயிலில் திங்கள்கிழமை (பிப்.1) கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
இந்தக் கோயில் புதுப்பிக்கப்பட்டு, திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேக விழா அண்மையில் தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு விக்னேஷ்வர பூஜையுடன் யாக சாலை பூஜைகள் தொடங்கின.
இதன் தொடா்ச்சியாக திங்கள்கிழமை காலை 6 மணிக்கு கடம் புறப்பாடாகி புனிதநீா் கொண்டுவரப்பட்டு, துா்க்கையம்மன், விநாயகா், முருகா், நாகராஜ சுவாமி சந்நிதிகளில் புனிதநீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையடுத்து, அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறுகின்றன. ஏற்பாடுகளை கோயில் நிா்வாகி எம்.பாவாடை தலைமையிலான குழுவினா் செய்துள்ளனா்.