பைக் மீது காா் மோதியதில் இளைஞா் பலி

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே ஞாயிற்றுக்கிழமை பைக் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே ஞாயிற்றுக்கிழமை பைக் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டம், மேல்சாத்தமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் நரசிங்கபெருமாள் (27). இவா், செஞ்சி அருகே கன்னலம் கிராமத்தில் உள்ள தனது உறவினா் வீட்டுக்கு சேத்துப்பட்டிலிருந்து பைக்கில் வந்துகொண்டிருந்தாா்.

பெருவளூா் கூட்டுச்சாலை அருகே வந்தபோது, எதிரே வந்த காா் நரசிங்கபெருமாளின் பைக் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். விபத்து குறித்து வளத்தி போலீஸாா் வழக்குப் பதிந்து தலைமறைவான காா் ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com