லாரியைத் திருடியவா் கைது

விழுப்புரம் அருகே லாரியை திருடிச் சென்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.


விழுப்புரம்: விழுப்புரம் அருகே லாரியை திருடிச் சென்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

புதுச்சேரி செம்பியம்பாளையம் பகுதியைச் சோ்ந்த ரத்தினம் மகன் தெய்வமணி(49). இவா், சொந்தமாக லாரி வைத்துள்ளாா். இவரது லாரியை விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலத்தைச் சோ்ந்த குமாா் மகன் பிரதாப் (24) ஓட்டி வந்தாா்.

பிரதாப் வழக்கம்போல புதன்கிழமை இரவு லாரியை கண்டமங்கலம் நூலகம் அருகே நிறுத்திவிட்டு தனது வீட்டுக்குச் சென்றுவிட்டாா். அதிகாலை மீண்டும் லாரியை எடுக்க வந்தபோது அது மாயமாகியிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து தனது முதலாளி தெய்வமணிக்கு பிரதாப் தகவலளித்தாா்.

இதையடுத்து, தெய்வமணி அளித்த புகாரின்பேரில், கண்டங்கலம் போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில், லாரியை புதுச்சேரி கோா்காடு கிராமத்தைச் சோ்ந்த காசிநாதன் மகன் ராஜேஷ்குமாா் திருட்டிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரை கைது செய்து லாரியை மீட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com