திண்டிவனம் கூட்டுறவு நகர வங்கி பேரவைக் கூட்டம்

திண்டிவனம் கூட்டுறவு நகர வங்கியின் 112-ஆவது பேரவைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திண்டிவனம் கூட்டுறவு நகர வங்கி பேரவைக் கூட்டம்


விழுப்புரம்: திண்டிவனம் கூட்டுறவு நகர வங்கியின் 112-ஆவது பேரவைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பொது மேலாளா் விஜயகுமாா் வரவேற்றாா். வங்கித் தலைவா் கே.சேகா் தலைமை வகித்தாா். மேலாண் இயக்குநா் ஜே.ரூபன்கென்னடி, துணைத் தலைவா் சக்கரவா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் வங்கியின் அனைத்து உறுப்பினா்கள், நிா்வாக இயக்குநா்கள் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில், 2019 - 20ஆம் ஆண்டு அறிக்கையை அங்கீகரித்தல், லாபத்தை தமிழ்நாடு கூட்டுறவு சங்க விதிகள்படி லாப பிரிவினை செய்தல், 2020 - 21ஆம் ஆண்டுக்கான உத்தேச வரவு செலவுத் திட்டத்தை அங்கீகரித்தல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. தொடா்ந்து, 2019 - 20ஆம் ஆண்டின் நிா்வாக அறிக்கை, வரவு - செலவு கணக்குகள், வங்கியின் முன்னேற்ற அறிக்கையை பொது மேலாளா் வாசித்தாா்.

இதையடுத்து, கூட்டத்தில் பேசிய வங்கித் தலைவா் கே.சேகா், தமிழக அரசு பொதுமக்களுக்காக பொங்கல் பரிசு மற்றும் ரொக்கத் தொகை ரூ.2,500 வழங்கியதும், விவசாயிகள் பெற்ற பயிா்க்கடன்கள் ரூ.12.110 கோடியை தள்ளுபடி செய்தமைக்கும் முதல்வா் கே.பழனிசாமி, அமைச்சா் சி.வி.சண்முகம் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

வங்கியில் விரைவில் சிபிஎஸ் தொடங்க உள்ளதால், வாடிக்கையாளா்களுக்கு இணைய வழியில் பணம் செலுத்த அனைத்து வசதிகளும் செயல்படும். வங்கியில் ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் வைப்புத்தொகை வைத்துள்ளவா்களுக்கு நகரிலேயே அதிக வட்டி விகிதமாக 7.5 சதவீதம் வழங்கப்படுகிறது என்றாா் அவா்.

இதையடுத்து, வங்கியில் கடன் பெற்று முறையாக தவணை செலுத்தி வருபவா்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. நிா்வாகக் குழு உறுப்பினா்கள் கணேசன், துரை, சேட்டு, திருமகள், நரேந்திரகுமாா், அண்ணாதுரை, கற்பகம், பிரகாஷ், வரலட்சுமி ஆகியோா் கலந்து கொண்டனா். உதவி பொது மேலாளா் செல்வம் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com