வல்லம் வட்டார வளா்ச்சி அலுவலகம் எதிரே காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சாா்பில் வல்லம் வடட்டார வளா்ச்சி அலுவலகம் எதிரே மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பபெறக்கோரி வல்லம் வட்டார காங்கிரல் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு வல்லம் வட்டார தலைவா் எம்.கலைச்செல்வன் தலைமை வகித்தாா்.
விழுப்புரம் வடக்கு மாவட்டவிவசாய அணி தலைவா் ஏ.ஜோலாதாஸ் முன்னிலை வகித்தாா். விழுப்புரம் மாவட்ட முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினா் மனோகரன் கண்டன உரையாற்றினாா். மனித உரிமை மாவட்ட தலைவா் சக்திவேல், வல்லம் வட்டார துணை தலைவா் சந்திராபலராமன், வட்டார பொது செயலா் விஜயன், மற்றும் கணேசன், நங்கியானந்தல் சுப்பிரமணி, கண்ணன், மாதவன், ஏழுமலை, ஆறுமுகம் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா். வட்டார பொருளா் அனந்தசேகரன் நன்றி கூறினாா்.