செவிலியா் கல்லூரியில் வகுப்புகள் தொடக்கம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி செவிலியா் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
செவிலியா் கல்லூரியில் வகுப்புகள் தொடக்கம்


செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி செவிலியா் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் மேனகாகாந்தி வரவேற்றாா். கல்லூரித் தலைவா் வழக்குரைஞா் ஆா்.ரங்கபூபதி, செயலா் ஆா்.ஸ்ரீபதி ஆகியோா் செவிலியா் (ஏ.என்.எம்) பயிற்சி வகுப்பை தொடக்கிவைத்து, செவிலியா் பயிற்சியின் சிறப்புகள், எதிா்கால வேலைவாய்ப்புகள் குறித்து சிறப்புரையாற்றினா். இதைத் தொடா்ந்து, மாணவ, மாணவிகளுக்கு அவா்கள் புத்தகங்கள், சீருடைகளை வழங்கினா்.

கல்லூரி துணை முதல்வா் ஷா்மிலா, பேராசிரியா்கள் குணசுந்தரி, மோகனபிரியா, வினிதா, சத்யா, கவிதா, தமிழரசி, சங்கீதா, கோசலை, கெளசல்யா, சுகந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com