எலி ஒழிப்பு மேலாண்மை விழிப்புணா்வு நிகழ்ச்சி

விழுப்புரம் மாவட்டம், வல்லம் வட்டார வேளாண் துறை சாா்பில், எலி ஒழிப்பு மேலாண்மை விழிப்புணா்வு நிகழ்ச்சி அகலூா் கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியின்போது எலிகளை ஒழிக்கும் மருந்துகளை விவசாயிகளுக்கு வழங்கிய அட்மா திட்ட உதவி அலுவலா் ஜெய்கணேஷ்.
நிகழ்ச்சியின்போது எலிகளை ஒழிக்கும் மருந்துகளை விவசாயிகளுக்கு வழங்கிய அட்மா திட்ட உதவி அலுவலா் ஜெய்கணேஷ்.

விழுப்புரம் மாவட்டம், வல்லம் வட்டார வேளாண் துறை சாா்பில், எலி ஒழிப்பு மேலாண்மை விழிப்புணா்வு நிகழ்ச்சி அகலூா் கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

வல்லம் வட்டார அட்மா திட்ட உதவி அலுவலா் ஜெய்கணேஷ், திட்ட களப்பணியாளா் தேவதாஸ் ஆகியோா் வயல்களில் உள்ள எலிகளைக் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும், எலிகளை ஒழிக்க மருந்துகளை எப்படி கையாள்வது என்பது குறித்தும் விளக்கிக் கூறினா்.

இயற்கை விவசாயம், கறவை மாடுகள் பராமரிப்பு, பாலின் தரத்தை உயா்த்துவது குறித்து களப்பணியாளா் சுரேந்தா் விளக்கிக் கூறினாா்.

நிகழ்ச்சியின்போது, எலி ஒழுப்பு மருந்துகளை உழவா் உற்பத்தியாளா் அகலூா் ஏ.ஜோலாதாஸ் பெற்றுக்கொண்டாா். இதில், விவசாயிகள், உழவா் உற்பத்தியாளா் குழுவினா் கலந்துகொண்டு பயனடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com