விழுப்புரம், சாலாமேடு பகுதியில் உள்ள அஷ்டவராகி கோயிலில், பள்ளி மாணவா்கள் கல்வியில் சிறக்கவும், நன்கு மேம்படவும் வேண்டி வித்யா சரஸ்வதி யாகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சாக்த ஸ்ரீ ஸ்ரீ மகேஷ்ராம் குருக்கள் தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு யாகத்தில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவ, மாணவிகள் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா். மாணவ, மாணவிகளுக்கு சென்னையைச் சோ்ந்த ரவிக்குமாா் நோட்டு புத்தகங்கள், எழுது பொருள்களை இலவசமாக வழங்கினாா்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டச் செயலாளா் குமரன் மற்றும் மாணவா்களின் பெற்றோா்கள் பங்கேற்றனா்.