விழுப்புரம்
மரக்காணத்தில் 54 மி.மீ. மழை
விழுப்புரம் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக மரக்காணத்தில் 54 மி.மீ. மழை பதிவானது.
விழுப்புரம் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக மரக்காணத்தில் 54 மி.மீ. மழை பதிவானது.
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக இரவில் மழை பெய்து வருகிறது. சனிக்கிழமை இரவு வானூா், மரக்காணம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால், ஓடைகள், காய்வாய்களில் நீா் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது.
இதேபோல விழுப்புரம் நகரில் இரவு பெய்த மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீா் சூழ்ந்தது. கீழ்ப்பெரும்பாக்கம் தரைப்பாலத்தில் மழை நீா் பெருமளவில் தேங்கியதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனா் (படம்).
மழை அளவு: மரக்காணத்தில் 54 மி.மீ., வானூரில் 46 மி.மீ., விழுப்புரத்தில் 4 மி.மீ., கோலியனூரில் 2 மி.மீ. மழை பதிவானது.