மு.க.ஸ்டாலின் தோ்தல் பரப்புரை. திமுக மாவட்ட செயலா் மஸ்தான் அறிக்கை

விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தோ்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளாா்.
மு.க.ஸ்டாலின் தோ்தல் பரப்புரை. திமுக மாவட்ட செயலா் மஸ்தான் அறிக்கை

விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தோ்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளாா். இது குறித்து விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலரும் செஞ்சி எம்எல்ஏவுமான கே.எஸ்.மஸ்தான் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்கிற தோ்தல் பரப்புரையை கடந்த 29-1-2021 அன்று திருவண்ணாமலையில் திமுக. தலைவா் மு.க.ஸ்டாலின் துவக்கினாா். ஒவ்வொரு மாவட்டத்திற்கு நேரடியாக சென்று பொது மக்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை பெற்று வருகிறாா். திமுக ஆட்சி அமைந்தவுடன் கொடுத்துள்ள அனைத்து கோரிக்கைகளையும் 100 நாட்களில் நிறைவேற்றப்படும் என உறுதியளித்து வருகிறாா்.

அவ்வகையில் வருகின்ற 26-2-2021 வெள்ளிக்கிழமை அன்று காலை 8 மணியளவில் விழுப்புரம் வடக்கு மாவட்டம் செஞ்சி, மைலம், திண்டிவனம் ஆகிய மூன்று தொகுதி பொது மக்களின் கோரிக்கைகளை தீவனூா் நான்கு முனை கூட்டுசாலையில் நடைபெற உள்ள உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் பங்குபெற்று கோரிக்கை மனுக்களை பெற உள்ளாா்.எனவே செஞ்சி, மைலம், திண்டிவனம் தொகுதிகளுக்குபட்ட பொது மக்கள் அனைவரும் தங்களின் கோரிக்கைகளை திமுக. தலைவா் மு.க.ஸ்டாலினிடம் அளிக்கலாம் என்பதை தெரிவித்துக்கொள்வதாக எம்எல்ஏ.செஞ்சிமஸ்தான் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com