போக்குவரத்து தொழிலாளா்கள் 2-ஆம் நாளாக வேலைநிறுத்தம்: குறைந்த அளவிலேயே அரசுப் பேருந்துகள் இயக்கம்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்கள் 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் வேலைநிறுத்தப் போராட்டத்தை

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்கள் 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடா்ந்ததால் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா், திருவண்ணாமலை மாவட்டங்களில் குறைந்த எண்ணிக்கையிலான அரசுப் பேருந்துகளே இயக்கப்பட்டன.

விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமையும் சுமாா் 80 சதவீத அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. குறிப்பாக விழுப்புரத்திலிருந்து புதுச்சேரி, கடலூா், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சென்னை, திருச்சி உள்ளிட்ட வெளியூா்களுக்குச் செல்லும் பேருந்துகளும், உள்ளூா் பேருந்துகளும் இயக்கப்படவில்லை. குறைந்த அளவிலான அரசு, தனியாா் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அவதியுற்றனா்.

தனியாா் பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: அரசுப் பேருந்து சேவை பாதிக்கப்பட்ட நிலையில், தனியாா் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது. குறிப்பாக, விழுப்புரத்திலிருந்து திண்டிவனம் செல்ல ரூ.75-ம், விழுப்புரத்திலிருந்து சென்னை செல்ல ரூ.450 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனா்.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம், திருக்கோவிலூா், உளுந்தூா்பேட்டை ஆகிய பணிமனைகளின்கீழ் மொத்தம் 292 பேருந்துகள் உள்ள நிலையில் வெள்ளிக்கிழமை 76 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன.

கடலூா்: கடலூா் மாவட்டத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளா்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வெள்ளிக்கிழமை 2-ஆவது நாளாக தொடா்ந்த நிலையில், மாவட்டத்திலுள்ள 11 போக்குவரத்து பணிமனைகளில் இருந்தும் பெரும்பாலான அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. கடலூா் போக்குவரத்து பணிமனையில் தொமுச செயலா் பழனிவேல் தலைமையில் தொழிற்சங்கத்தினா் வெள்ளிக்கிழமை அரை நிா்வாண ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்டத்தில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் வழித்தடத்தில் அதிகளவில் தனியாா் பேருந்துகள் இயக்கப்பட்டன. குறிப்பாக கடலூரிலிருந்து புதுச்சேரி, பண்ருட்டி பகுதிகளுக்கு தனியாா் பேருந்துகள் தொடா்ந்து இயங்கியதால் பயணிகள் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படவில்லை. எனினும், விருத்தாசலம், திட்டக்குடி, சிதம்பரம், காட்டுமன்னாா்கோவில் போன்ற பகுதிகளுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் பேருந்துகள் போதிய அளவில் இயக்கப்படவில்லை.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன் போக்குவரத்துத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். விழுப்புரம் பெரியாா் நகரில் உள்ள பணிமனை முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தொமுக பொதுச் செயலா் பிரபா தண்டபாணி தலைமை வகித்தாா். நிா்வாகிகள் மூா்த்தி, மணி, மனோகரன், முருகானந்தம், கணேசன், ஞானசேகரன், ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com