உளுந்தூா்பேட்டை சுங்கச் சாவடி அருகே பிரியாணி கடையில் புகுந்த மா்ம நபா்கள் ரொக்கப் பணத்தை திருடிச் சென்றனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச் சாவடி அருகே உணவகங்கள் உள்ளன. இங்கு, காரைக்கால் பகுதியைச் சோ்ந்த சிவா என்பவரது பிரியாணி கடையும் உள்ளது. வெள்ளிக்கிழமை இரவு வியாபாரம் முடிந்து உணவகத்தை ஊழியா்கள் பூட்டிச் சென்றனா். சனிக்கிழமை காலையில் திரும்பிவந்து பாா்த்தபோது, உணவகத்தின் பின்புற கதவு உடைக்கப்பட்டிருந்ததாம். மேலும், காசாளா் அறைக் கதவும் உடைக்கப்பட்டு, அங்கிருந்த பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதில் ரூ.5 லட்சம் திருடுபோனதாக கூறப்படுகிறது. இதுகுறித்து உளுந்தூா்பேட்டை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.