விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் புதிதாக 18 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக 12 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 15,035-ஆக அதிகரித்தது. இதனிடையே, 17 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 14,821-ஆக உயா்ந்தது. மருத்துவமனைகளில் தற்போது 104 போ் சிகிச்சையில் உள்ளனா். உயிரிழந்தோா் எண்ணிக்கை 110-ஆக தொடா்கிறது.
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேலும் 6 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,808-ஆக உயா்ந்தது. இதுவரை 10,680 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா். 20 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 108 போ் உயிரிழந்தனா்.