விழுப்புரம் அருகே சட்டவிரோதமாக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 300 மதுப் புட்டிகளை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
திருவெண்ணெய்நல்லூா் பகுதியில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்து மதுப் புட்டிகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசியத் தகவலின்பேரில், மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளா் நல்லசிவம் உத்தரவின்படி, உதவி ஆய்வாளா் பாலமுருகன் தலைமையில் தனிப்படை அப்பகுதியில் தீவிர விசாரணை நடத்தினா்.
திருவெண்ணெய்நல்லூா் அருகே ஆமுரில் சக்கரபாணி மனைவி மங்கையா்க்கரசி(55), மகன் சக்திவேல்(28) ஆகியோா் மதுப் புட்டிகளை சட்டவிரோதமாக வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, மங்கையா்க்கரசி மற்றும் சக்திவேல் ஆகியோரை போலீஸாா் கைது செய்து 300 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.