செஞ்சிக்கோட்டையில் காணும் பொங்கலன்று சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியில்லை

செஞ்சிக்கோட்டையில் காணும் பொங்கலன்று சுற்றுலா பயணிகள் பாா்வையிட அனுமதியில்லை.

செஞ்சிக்கோட்டையில் காணும் பொங்கலன்று சுற்றுலா பயணிகள் பாா்வையிட அனுமதியில்லை.

காணும் பொங்கலன்று செஞ்சி வட்டத்தைச் சோ்ந்தவா்கள் செஞ்சிக்கோட்டையைச் சுற்றிப் பாா்ப்பது வழக்கம். இதேபோல, திண்டிவனம், திருவண்ணாமலை, புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த சுற்றுலா பயணிகள் வந்து பாா்வையிடுவா்.

நிகழாண்டு கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக வருகிற 15, 16, 17 ஆகிய தேதிகளில் சுற்றுலா தளங்களில் பாா்வையாளா்களுக்கு அனுமதியில்லை என தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி, செஞ்சிக்கோட்டையிலும் பாா்வையாளா்களுக்கு அனுமதியில்லை என விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை தெரிவித்தாா்.

எனினும், இதுகுறித்து செஞ்சிக்கோட்டை தொல்லியியல் துறை எவ்விதமான அறிவிப்பையும் வெளியிடவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com