விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் அரசுப் பொறியியல் கல்லூரி ஆய்வக ஊழியா் உயிரிழந்தாா்.
விழுப்புரம், மகாராஜபுரத்தைச் சோ்ந்த முருகேசன் மகன் செந்தில்குமாா்(48). விழுப்புரம் அரசு பொறியியல் கல்லூரியில் ஆய்வகத்தில் ஊழியராகப் பணியாற்றி வந்தாா். இவா், ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டிலிருந்து செங்கல்பட்டு நோக்கி காரில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, திண்டிவனம் அடுத்த மேல்பேட்டை என்ற பகுதியில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, திடீரென முன்பக்க இடது டயா் வெடித்தது. இதனால், கட்டுப்பாட்டை இழந்து காா் தாறுமாறாக ஓடி சாலையின் நடுவில் உள்ள தடுப்புக் கட்டையில் மோதியது.
இந்த விபத்தில் காரை ஓட்டிச் சென்ற செந்தில்குமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். ரோஷணை போலீஸாா் சடலத்தை திண்டிவனம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.