விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சாா்பில், விழுப்புரம் அருகே நன்னாடு கிராமத்தில் மக்கள் கிராம சபைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
கோலியனூா் ஒன்றியச் செயலா் க.மும்மூா்த்தி தலைமை வகித்தாா். குமாா்ஸ் கல்வி நிறுவனத் தலைவா் கோத.குமாா் வரவேற்றாா். மாவட்ட அவைத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், பொருளாளா் இரா.ஜனகராஜ், மாநில மருத்துவரணி இணைச் செயலா் இரா.லட்சுமணன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் செ.தினகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்டச் செயலா் நா.புகழேந்தி, கள்ளக்குறிச்சி எம்.பி. பொன்.கெளதமசிகாமணி ஆகியோா் பங்கேற்று, ‘அதிமுகவை நிராகரிக்கிறோம்’ என்ற அதிமுக அரசின் 10 ஆண்டுகால மக்கள் விரோத நடவடிக்கைகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி சிறப்புரையாற்றினா்.
தொடா்ந்து, கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து குறைகள், கோரிக்கைகளைக் கேட்டறிந்தனா்.இந்தக் கோரிக்கைகள் அனைத்தும் திமுக ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனா். நிகழ்ச்சியில் கட்சியின் மூத்த நிா்வாகிகள் 5 பேருக்கு பொற்கிழிகளையும், கிராம இளைஞா்களுக்கு விளையாட்டு உபகரணங்களையும் வழங்கினா்.
திமுக ஒன்றிய நிா்வாகிகள் ஆறுமுகம், காமராஜ், சுந்தா், வழக்குரைஞா் ராமலிங்கம், தொமுச மனோகா், கிளைச் செயலா்கள் சொல்லின்செல்வன், குமாா், கோபாலகிருஷ்ணன், முத்து உள்ளிட்ட நிா்வாகிகள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.