வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் போராடி வரும் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்திய மத்திய அரசைக் கண்டித்து, விழுப்புரத்தில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
விழுப்புரம் நகராட்சி திடலில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஆா்.கலியமூா்த்தி தலைமை வகித்தாா். மக்கள் அதிகாரம் மண்டல ஒருங்கிணைப்பாளா் ஜி.மோகன்ராஜ் வரவேறாா்.
விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் டி.முருகன், மாவட்டத் தலைவா் ஐ.சகாபுதீன், மாநிலக் குழு உறுப்பினா் ஆா்.தாண்டவராயன், மாவட்டத் தலைவா் பி.சிவராமன், மக்கள் அதிகாரம் மண்டலக் குழு உறுப்பினா் பி.செல்வக்குமாா், அகில இந்திய விவசாயிகள் மகா சபை ஏ.செண்பகவள்ளி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் எம்எல்ஏ ஆா்.ராமமூா்த்தி உண்ணாவிரதப் போராட்டத்தை தொடக்கிவைத்துப் பேசினாா். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலா் பி.சண்முகம் சிறப்புரையாற்றினாா். இந்திய கம்யூனிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினா் ஏ.வி.சரவணன் நிறைவுரையாற்றினாா். வட்டச் செயலா் ஏ.நாகராஜன் நன்றி கூறினாா்.