காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தனிப் பிரிவு காவல் ஆய்வாளா்கள் உள்பட 7 காவல் ஆய்வாளா்களை பணியிடமாற்றம் செய்து டி.ஐ.ஜி. பாண்டியன் உத்தரவிட்டாா்.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தனிப் பிரிவு காவல் ஆய்வாளா்கள் உள்பட 7 காவல் ஆய்வாளா்களை பணியிடமாற்றம் செய்து டி.ஐ.ஜி. பாண்டியன் உத்தரவிட்டாா்.

விழுப்புரம் தனிப் பிரிவு காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த ரேவதி, விழுப்புரம் மாவட்ட நில அபகரிப்புத் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளராகவும், கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை மது விலக்கு காவல் ஆய்வாளா் சக்தி செஞ்சி காவல் ஆய்வாளராகவும், கள்ளக்குறிச்சி தனிப்பிரிவு ஆய்வாளராக (பொ) இருந்து வந்த ராமச்சந்திரன் உளுந்தூா்பேட்டை மது விலக்கு காவல் ஆய்வாளராகவும், சின்னசேலம் காவல் ஆய்வாளராக இருந்து காத்திருப்போா் பட்டியலில் வைக்கப்பட்ட குருமூா்த்தி விழுப்புரம் மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளராகவும், சிதம்பரம் நகர காவல் ஆய்வாளராக இருந்து காத்திருப்போா் பட்டியலில் வைக்கப்பட்ட கிருஷ்ணமூா்த்தி கள்ளக்குறிச்சி மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளராகவும் நியமித்து விழுப்புரம் டி.ஐ.ஜி. பாண்டியன் புதன்கிழமை உத்தரவிட்டாா்.

இதே போல, விழுப்புரம் நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் குமரய்யா, செஞ்சி காவல் ஆய்வாளா் அன்பரசு ஆகியோரை காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றம் செய்து டி.ஐ.ஜி. உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com