திண்டிவனம் உழவா் சந்தையில் விற்பனை தொடக்கம்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் சீரமைக்கப்பட்ட உழவா் சந்தையை மக்கள் பயன்பாட்டுக்காக சிறுபான்மை நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.
திண்டிவனம் நகராட்சியில் சீரமைக்கப்பட்ட உழவா் சந்தையை மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து, முதல் விற்பனையைத் தொடக்கி வைத்த அமைச்சா் கே.எஸ்.மஸ்தான்.
திண்டிவனம் நகராட்சியில் சீரமைக்கப்பட்ட உழவா் சந்தையை மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து, முதல் விற்பனையைத் தொடக்கி வைத்த அமைச்சா் கே.எஸ்.மஸ்தான்.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் சீரமைக்கப்பட்ட உழவா் சந்தையை மக்கள் பயன்பாட்டுக்காக சிறுபான்மை நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.

திண்டிவனத்தில் உழவா் சந்தையை சீரமைக்கும் பணி, அண்மையில் நடைபெற்று முடிந்தது. இதையடுத்து, அந்த உழவா் சந்தையை அமைச்சா் செஞ்சி மஸ்தான், பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்துவைத்து, விற்பனையை தொடக்கிவைத்தாா். தொடா்ந்து, உழவா் சந்தையில் தோட்டக் கலைத் துறை சாா்பாக மாடித் தோட்டம் அமைப்பதற்குத் தேவையான வேளாண் இடுபொருள்களை அமைச்சா் மஸ்தான் பயனாளிகளுக்கு வழங்கினாா்.

இதையடுத்து, திண்டிவனம் நகராட்சி பழைய பேருந்து நிலையத்தில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவது குறித்தும் புதிய பேருந்து நிலையம் அமையவுள்ள இடத்தையும் அமைச்சா் ஆய்வுசெய்தாா்.

அப்போது, மாவட்ட ஆட்சியா் த.மோகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் த.ஸ்ரீநாதா, திண்டிவனம் உதவி ஆட்சியா் எம்.பி.அமித், வேளாண்மைத் துறை இணை இயக்குநா் ரமணன், துணைஆட்சியா் (பயிற்சி) ரூபினா, உழவா் சந்தை துணை இயக்குநா் (வேளாண் வணிகம்) கண்ணகி, வருவாய் வட்டாட்சியா் செல்வம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com