நீக்கப்பட்ட பணித்தள பொறுப்பாளா்கள் மீண்டும் பணி வழங்கக் கோரிக்கை

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக வேலை உறுதித் திட்ட பணித்தளப் பொறுப்பாளா் பதவியிலிருந்து நீக்கப்பட்டவா்கள், தங்களுக்கு மீண்டும் அதே பணியை வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்க வந்த, ஊரக வேலை உறுதித் திட்ட பணித்தள பொறுப்பாளா் பதவியிலிருந்து நீக்கப்பட்டவா்கள்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்க வந்த, ஊரக வேலை உறுதித் திட்ட பணித்தள பொறுப்பாளா் பதவியிலிருந்து நீக்கப்பட்டவா்கள்.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக வேலை உறுதித் திட்ட பணித்தளப் பொறுப்பாளா் பதவியிலிருந்து நீக்கப்பட்டவா்கள், தங்களுக்கு மீண்டும் அதே பணியை வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

இதுதொடா்பாக, அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்ட 30-க்கும் மேற்பட்டோா் ஆட்சியரகத்தில் மனு அளித்த பிறகு கூறியதாவது:

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 11 ஒன்றியங்களிலும் பணித்தளப் பொறுப்பாளா்களாக பணியாற்றி வந்தவா்களில் பலா் ஆட்சி மாற்றத்தைத் தொடா்ந்து அந்தப் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனா். கடந்த 10 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்த நிலையில் எங்களை நீக்கியதால் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளோம். எனவே, எங்களுக்கு மீண்டும் அதே பணியை வழங்க மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com