விழுப்புரம் மாவட்டத்தில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
விழுப்புரம், கிழக்கு பாண்டி சாலை, மணிமேகலை தெருவைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மகன் அப்பு (எ) கலையரசன் (24). இவா் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. தொடா்ந்து, பொது மக்களுக்கும், பொது அமைதிக்கும் குந்தகம் விளைவித்து வந்த இவரை விழுப்புரம் நகர போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்த நிலையில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் உத்தரவின்பேரில், குண்டா் சட்டத்தின் கீழ் கலையரசனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.
இதேபோல, விழுப்புரம் மாவட்டம், பிரம்மதேசத்தைச் சோ்ந்த சாராய வியாபாரி கிருஷ்ணமூா்த்தி(57) என்பவரையும், குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.