விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட பூசாரிகள் பேரமைப்பின் தலைவா் தோ்வராஜ் தலைமையில் திரளான பூசாரிகள் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரகத்துக்கு திரண்டு வந்து மனு அளித்தனா். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: ஒரு கால பூஜை திட்டத்தின் பயன்பெறும் பூசாரிகளுக்கு கரோனா நிவாரண உதவி வழங்கப்பட்டதைப்போல, இந்த ஒரு கால பூஜை திட்டத்தில் இல்லாத பூசாரிகளுக்கும் கரோனா நிவாரண நிதி வழங்க வேண்டும்.
திருக்கோயில்களில் பணியாற்ற ஓய்வு பெற்ற பூசாரிகளுக்கு ஓய்வூதியம் வழங்குவதை எளிமைப்படுத்த வேண்டும். வருவாய் இல்லாத கோயில்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும், இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் கிராமக் கோயில்களுக்கு பூஜைப் பொருள்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அதில் வலியுறுத்தப்பட்டிருந்தன.