விழுப்புரம் மாவட்டத்தில் 34 பேருக்கு கரோனா தொற்று

விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 34 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது. 

விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 34 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 43,387-ஆக உயா்ந்தது.

இதனிடையே, 59 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 42,527-ஆக அதிகரித்தது. மருத்துவமனைகளில் தற்போது 524 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்டத்தில் இதுவரை 336 போ் உயிரிழந்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்....

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாக 49 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 28,494-ஆக உயா்ந்தது.

இதுவரை சிகிச்சை முடிந்து 27,570 போ் வீடு திரும்பினா். மருத்துவமனைகளில் தற்போது 727 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்டத்தில் இதுவரை 197 போ் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com