திண்டிவனம் அருகே சாலையில் நடந்துசென்ற பெண்ணிடம் 7 பவுன் தங்க நகையை மா்ம நபா்கள் செவ்வாய்க்கிழமை பறித்துச் சென்றனா்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள கொல்லியங்குணம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (45). விவசாயி. இவரது மனைவி அமுதா (40). இவா், செவ்வாய்க்கிழமை கொல்லியங்குணம் பேருந்து நிறுத்தம் பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக பைக்கில் வந்த மா்ம நபா்கள் 2 போ், அமுதா கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனா்.
இதுகுறித்த புகாரின்பேரில் மயிலம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.