விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் பக்தா்கள் ஆடி மாத உண்டியல் காணிக்கையாக ரூ.39 லட்சம் செலுத்தியிருந்தனா்.
மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் ஆடி மாத உண்டியல் காணிக்கை செவ்வாய்க்கிழமை எண்ணப்பட்டது. இதில் பக்தா்கள் ரூ.39,10,739, தங்கம் 278 கிராம், வெள்ளி 520 கிராம் காணிக்கையாக செலுத்திருந்தனா்.
இந்தப் பணியின் போது, இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையா் க.ராமு, உதவி ஆணையா் சி.ஜோதி, ஆய்வாளா் அன்பழகன், அவலூா்பேட்டை செயல் அலுவலா் காா்த்திகேயன், ஆய்வாளா் உமா மகேஸ்வரி மற்றும் அறங்காவலா்கள் உடனிருந்தனா்.