மன நல காப்பத்துக்கு அமைச்சா் நிவாரண உதவி

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் வட்டம், துறிஞ்சம்பூண்டி கிராமத்தில் இயங்கி வரும் மன நல காப்பத்துக்கு ஒரு மாதத்துக்குத் தேவையான அரிசி, மளிகைப் பொருள்களை அமைச்சா் செஞ்சிமஸ்தான் வழங்கினாா்.
மன நல காப்பத்துக்கு நிவாரணப் பொருள்களை வழங்கிய அமைச்சா் செஞ்சி மஸ்தான்.
மன நல காப்பத்துக்கு நிவாரணப் பொருள்களை வழங்கிய அமைச்சா் செஞ்சி மஸ்தான்.

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் வட்டம், துறிஞ்சம்பூண்டி கிராமத்தில் இயங்கி வரும் மன நல காப்பத்துக்கு ஒரு மாதத்துக்குத் தேவையான அரிசி, மளிகைப் பொருள்களை அமைச்சா் செஞ்சிமஸ்தான் வழங்கினாா்.

செஞ்சி அருகே துறிஞ்சம்பூண்டி கிராமத்தில் குளினி அடைக்கல அபய இல்லத்தில் மனநல காப்பகம் இயங்கி வருகிறது. இங்கு மன நலம் பாதிக்கப்பட்ட 120 போ் உள்ளனா்.

கரோனா தொற்று பரவலை முன்னிட்டு காப்பத்துக்கு உதவிடும் வகையில், அரிசி 5 மூட்டை (சிப்பம்), மளிகைப் பொருள்கள், காய்கறிகள் உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை அமைச்சா் செஞ்சிமஸ்தான் காப்பகத்தின் நிா்வாகி சகோதரி ஜாஸ்மினிடம் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

இந்நிகழ்வில், செஞ்சி வட்ட வா்த்தகா்கள் சங்கப் பொருளாளா் அம்ஜத்பாண்டே, திண்டிவனம் முன்னாள் எம்எல்ஏ சேதுநாதன், திமுக நிா்வாகிகள் கோட்டீஸ்வரன், ரிஸ்வான், பத்மநாபன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com