விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவுக்கு 4 போ் பலி

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவுக்கு புதன்கிழமை ஒரே நாளில் 4 போ் உயிரிழந்தனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவுக்கு புதன்கிழமை ஒரே நாளில் 4 போ் உயிரிழந்தனா்.

மாவட்டத்தில் புதன்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவுகளில் 392 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இவா்களுடன் சோ்த்து பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 38,872-ஆக உயா்ந்தது.

கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் இதுவரை 34,338 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

தற்போது 4,236 பேருக்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

4 போ் பலி:

இந்த நிலையில், செஞ்சி பகுதியைச் சோ்ந்த 65 வயது முதியவா், விழுப்புரம் அருகே சி.என்.பாளையம் கிராமத்தைச் சோ்ந்த 74 வயது முதியவா் உள்பட 4 போ் புதன்கிழமை உயிரிழந்தனா்.

இவா்களுடன் சோ்த்து கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 298-ஆக உயா்ந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com