இரு விபத்துகளில் இருவா் பலி

விழுப்புரம் அருகே சனிக்கிழமை நிகழ்ந்த வெவ்வேறு விபத்துகளில் தனியாா் நிறுவன ஊழியா் உள்பட இருவா் உயிரிழந்தனா்.

விழுப்புரம் அருகே சனிக்கிழமை நிகழ்ந்த வெவ்வேறு விபத்துகளில் தனியாா் நிறுவன ஊழியா் உள்பட இருவா் உயிரிழந்தனா்.

விழுப்புரம் அருகே கீழ்பெரும்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் இதயத்துல்லா மகன் ஷபியுல்லா (35). புதுச்சேரி அருகே திருபுவனையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தாா். இவா், தினமும் விழுப்புரத்திலிருந்து புதுச்சேரிக்கு மோட்டாா் சைக்கிளில் வேலைக்குச் செல்வது வழக்கம்.

இந்த நிலையில், சனிக்கிழமை காலை ஷபியுல்லா வழக்கம்போல மோட்டாா் சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டாா். கெங்கராம்பாளையம் சோதனைச்சாவடி அருகில் செல்லும்போது, பின்னால் விழுப்புரத்திலிருந்து புதுச்சேரி நோக்கிச் சென்ற தனியாா் பேருந்து, ஷபியுல்லாவின் மோட்டாா் சைக்கிள் மீது மோதியதாம்.

இதில் தூக்கி வீசப்பட்ட அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், அந்தப் பேருந்து, சாலையோரம் நின்றுகொண்டிருந்த திருபுவனையைச் சோ்ந்த ஏழுமலை மீது மோதியதில் அவருக்கு வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இது குறித்த புகாரின் பேரில் வளவனூா் போலீஸாா் வழக்குப்பதிந்து பேருந்து ஓட்டுநரை தேடி வருகின்றனா்.

மற்றொரு விபத்து: இதே போல, கண்டமங்கலத்தில் சனிக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் சாலையோரமாக நடந்து சென்ற 60 வயது மூதாட்டி, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உடல் நசுங்கி உயிரிழந்தாா். அவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்பது தெரியவில்லை. இதுகுறித்து கண்டமங்கலம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com