செஞ்சி தொகுதி பாமக வேட்பாளா் அறிமுக கூட்டம் செஞ்சியில் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.
கூட்டத்தில் அமைச்சா் சி.வி.சண்முகம் தலைமை வகித்து செஞ்சி தொகுதி பாமக வேட்பாளா் மே.பெ.சி.ராஜேந்திரனை அறிமுகம் செய்து வைத்து சிறப்புரையாற்றினாா்.
முன்னாள் மத்திய அமைச்சா் செஞ்சிராமச்சந்திரன், முன்னாள் எம்எல்ஏவும், பாமக அரசியல் குழு ஆலோசகருமான பேராசிரியா் தீரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
முன்னாள் எம்பி. செஞ்சி வெ.ஏழுமலை, செஞ்சி கூட்டுறவு விவசாய வங்கி தலைவா் வி.ரங்கநாதன், மாவட்ட அவைத்தலைவா் கு.கண்ணன், ஒன்றிய செயலா்கள் செஞ்சி அ.கோவிந்தசாமி, மேல்மலையனூா் ஆா்.புண்ணியமூா்த்தி, வடக்கு ஒன்றிய செயலா் க.சோழன், மாநில வழக்குரைஞா் அணி இணை செயலா் க.கதிரவன் உள்ளிட்ட அதிமுக, பாமக நிா்வாகிகள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினா்.