விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தொகுதி அமமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அந்தக் கட்சியின் விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலரான அ.கெளதம்சாகா் திங்கள்கிழமை தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டாா்.
செஞ்சி ஒன்றியம் பரதன்தாங்கல், ஆலம்பூண்டி, வி.நயம்பாடி, ஆா்.நயம்பாடி, தேவதானம்பேட்டை, தாண்டவசமுத்திரம், கணக்கன்குப்பம், கெங்கவரம் உள்ளிட்ட கிராமங்களில் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்தாா்.
பிரசாரத்தின்போது, அமமுக செஞ்சி மேற்கு ஒன்றியச் செயலா் சி.எம்.கணேசன், கிழக்கு ஒன்றியச் செயலா் பழனிவேல், மாவட்ட எம்ஜிஆா் இளைஞரணி சிவக்குமாா், ஆலம்பூண்டி கிளைச் செயலா் ஆறுமுகம், மகிமைநாதன், கூட்டணி கட்சியான தேமுதிகவின் மாவட்டப் பொருளா் இல.தயாநிதி, மேற்கு ஒன்றியச் செயலா் ரமேஷ், கிழக்கு ஒன்றியச் செயலா் பாபு, ஒன்றிய பொறுப்பாளா் அருள்முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.