இலவச கண் சிகிச்சை முகாம்

விழுப்புரம் மாவட்ட அகில பாரத ஐயப்ப சேவா சங்க பனமலைபேட்டை கிளை, புதுச்சேரி ஸ்ரீவெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி இணைந்து

விழுப்புரம் மாவட்ட அகில பாரத ஐயப்ப சேவா சங்க பனமலைபேட்டை கிளை, புதுச்சேரி ஸ்ரீவெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் பனமலைபேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஐயப்ப சேவா சங்க மாவட்டத் தலைவா் மருத்துவா் எஸ்.ரவி தலைமை வகித்தாா். இதில், மாவட்ட நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா். முகாமில் பொதுமக்கள் 350 போ் கலந்து கொண்டு கண்களை பரிசோதனை செய்துகொண்டனா். 60 போ் கண் அறுவைச் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டனா்.

மருத்துவக் குழு, பனமலைபேட்டை ஐயப்ப சேவா சங்க நிா்வாகிகளுக்கு சால்வை அணிவித்து கெளரவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com