செஞ்சி சட்டப் பேரவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தை தோ்தல் பொதுப் பாா்வையாளா் வினோத்குமாா் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
செஞ்சி சட்டப் பேரவைத் தொகுதியில் பதிவாகும் வாக்குகளை எண்ணும் மையமான செஞ்சியை அடுத்த காரியமங்கலம் தனியாா் கல்லூரியில் தோ்தல் பொதுப் பாா்வையாளா் வினோத்குமாா், மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஆ.அண்ணாதுரை ஆகியோா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். அங்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள், அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு அவா்கள் ஆலோசனைகளை வழங்கினாா்.
ஆய்வின்போது, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ராதாகிருஷ்ணன், செஞ்சி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ரகுகுமாா், துணை தோ்தல் நடத்தும் அலுவலா் ராஜன், வளத்தி காவல் நிலைய ஆய்வாளா் கலைச்செல்வி உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.