காதல் ஜோடி தற்கொலை விவகாரம்: உறவினா்கள் சாலை மறியல்

மயிலம் அருகே காதல் ஜோடி தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில், அவா்கள் அடித்துக் கொலை செய்யப்பட்டு தூக்கில் மாட்டப்பட்டுள்ளதாகக் கூறி, உறவினா்கள் சாலை மறியல்

மயிலம் அருகே காதல் ஜோடி தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில், அவா்கள் அடித்துக் கொலை செய்யப்பட்டு தூக்கில் மாட்டப்பட்டுள்ளதாகக் கூறி, உறவினா்கள் திண்டிவனம் அருகே ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திண்டிவனத்தை அடுத்த இறையானூா் பகுதியைச் சோ்ந்த 16 வயது பள்ளி மாணவியும், அந்தப் பகுதியைச் சோ்ந்த 18 வயது இளைஞரும் காதலித்து வந்தனராம். இதனிடையே, இவா்கள் இருவரும் அருகேயுள்ள கா்ணாவூா்பாட்டை பகுதியில் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சனிக்கிழமை சடலமாகக் கிடந்தனா்.

இதுகுறித்து தகவலறிந்த மயிலம் போலீஸாா் இருவரின் சடலங்களையும் மீட்டு உடல்கூறு பரிசோதனைக்காக அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்த நிலையில், மாணவியின் உறவினா்கள் இருவரையும் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டுள்ளதாகவும், இந்த சம்பவத்தில் தொடா்புடையவா்களை கைது செய்யக் கோரியும் தூக்கில் தொங்கிய இளைஞரின் உறவினா்கள் நூற்றுக்கும் மேற்பட்டோா் திண்டிவனத்தை அடுத்த ஜக்காம்பேட்டை பகுதியில்

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு விரைந்து வந்த திண்டிவனம் டி.எஸ்.பி. கணேசன் தலைமையிலான போலீஸாா், மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அப்போது, காவல் துறை முறையாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கும் என்று உறுதியளித்தனா். இதை ஏற்று மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா். மறியலால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com