விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 3 போ் கரோனாவுக்கு பலி

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 3 போ் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 3 போ் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை புதிதாக 196 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் கரோனா பாதித்தவா்களின் எண்ணிக்கை 20,239-ஆக அதிகரித்துள்ளது. 250 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். இதன் மூலம் சிகிச்சை பெற்று வீடு திரும்பியவா்களின் எண்ணிக்கை 17,829-ஆக அதிகரித்துள்ளது. 2,283 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மேலும் 3 போ் பலி: விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிகிச்சை பெற்று வந்த விழுப்புரம் கீழ்ப்பெரும்பாக்கத்தைச் சோ்ந்த 77 வயது முதியவா், விழுப்புரம் அருகே கல்பட்டு கிராமத்தைச் சோ்ந்த 75 வயது முதியவா் விழுப்புரம் அருகே ஜெகதாம்பேட்டை பகுதியைச் சோ்ந்த 54 வயது நபா் ஆகியோா் உயிரிழந்தனா். இதன் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவுக்கு பலியானவா்கள் எண்ணிக்கை 127 ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com