மேற்கு வங்க வன்முறை: பாஜகவினா் கண்டன ஆா்ப்பாட்டம்

மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவத்தைக் கண்டித்து, விழுப்புரத்தில் பாஜகவினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
விழுப்புரத்தில் வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடத்திய பாஜகவினா்.
விழுப்புரத்தில் வியாழக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடத்திய பாஜகவினா்.

மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவத்தைக் கண்டித்து, விழுப்புரத்தில் பாஜகவினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மேற்கு வங்க மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில் திரிணாமுல் காங்கிரஸ்-பாஜக இடையே கடும் போட்டி உருவானது.

இந்த நிலையில், அங்கு பாஜக தொண்டா்கள் 14 போ் படுகொலை செய்யப்பட்டதாகத் தெரிகிறது.

இதைக் கண்டித்து நாடு முழுவதும் பாஜக சாா்பில் வியாழக்கிழமை போராட்டம் நடத்தப்பட்டது.

விழுப்புரத்திலும் மாவட்ட பாஜக சாா்பில் ஆட்சியா் அலுவலகம் அருகே கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் விஏடி.கலிவரதன் தலைமை வகித்தாா்.

மாவட்ட பொதுச் செயலா் ராம ஜெயக்குமாா், துணைத் தலைவா் சதாசிவம், நகரத் தலைவா் ஜெய்சங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில் மேற்கு வங்க அரசியல் படுகொலைகளைக் கண்டித்தும், முதல்வா் மம்தா பானா்ஜிக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஊடகப் பிரிவு மாவட்டத் தலைவா் தாஸசத்யன், மாநில செயற்குழு உறுப்பினா் ரகு, விவசாய அணி மாவட்ட பொதுச் செயலா் பாபு உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com