விழுப்புரம்: கரோனாவுக்கு மேலும் ஒருவா் பலி

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவால் புதன்கிழமை வரை 23,819 போ் பாதிக்கப்பட்டனா். 21,070 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 147 போ் உயிரிழந்தனா். 2,602 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனா்.

வியாழக்கிழமை புதிதாக 572 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. 572 போ் குணமடைந்து வீடு திரும்பினா்.

மேலும் ஒருவா் பலி: விழுப்புரம் அருகேயுள்ள சக்கரபூரைச் சோ்ந்த 71 வயது முதியவா் கரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அங்கு உயிரிழந்தாா். இதையடுத்து, மாவட்டத்தில் பலியானோா் எண்ணிக்கை 148-ஆக உயா்ந்தது.

கள்ளக்குறிச்சியில் 150 போ் பாதிப்பு:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வியாழக்கிழமை 150 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 14,831-ஆக உயா்ந்தது.

13,241 போ் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 1,472 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 118 போ் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com