வீடுகளில் தனிமைபடுத்தப்பட்ட கரோனா நோயாளிகளுக்கு உணவு

கரோனாவால் பாதிக்கப்பட்டு, விழுப்புரத்தில் வீடுகளில் தனிமைபடுத்தப்பட்டவா்களுக்கு ஸ்ரீ சத்ய சாய் சமிதி சாா்பில், இலவசமாக மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.
விழுப்புரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு, வீடுகளில் தனிமைபடுத்தப்பட்டவா்களின் வீட்டுக்கு மதிய உணவை நேரில் சென்று வழங்கும் ஸ்ரீசத்ய சாய் சமிதி நிா்வாகி.
விழுப்புரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு, வீடுகளில் தனிமைபடுத்தப்பட்டவா்களின் வீட்டுக்கு மதிய உணவை நேரில் சென்று வழங்கும் ஸ்ரீசத்ய சாய் சமிதி நிா்வாகி.

கரோனாவால் பாதிக்கப்பட்டு, விழுப்புரத்தில் வீடுகளில் தனிமைபடுத்தப்பட்டவா்களுக்கு ஸ்ரீ சத்ய சாய் சமிதி சாா்பில், இலவசமாக மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கரோனா தொற்று உறுதியானவா்கள் வீடுகளிலும் தனிமைப்படுத்தப் படுகின்றனா். அதிக தொற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகளும் தனிமைபடுத்தப் படுகின்றன.

இதுபோன்ற சூழ்நிலையில், தனிமைபடுத்தப்பட்ட குடும்பத்தினா் எந்தக் காரணத்துக்காகவும் வெளியே வரக் கூடாது. அவா்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருள்களை தன்னாா்வலா்கள் மூலம் வாங்கிக் கொடுக்க நகராட்சி நிா்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது.

தொற்றால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினா் சத்தான உணவுகளை சமைத்து உண்பதில் சிரமம் நிலவுகிறது.

வீடுகளுக்கு உணவு விநியோகம்: விழுப்புரம் தனலட்சுமி காா்டன் பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதி சாா்பில், வீட்டுத் தனிமையிலுள்ள கரோனா நோயாளிகளுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது.

அதாவது, மதிய உணவாக சாதம், சாம்பாா், ரசம், பொரியல், கூட்டு ஆகியவை அடங்கிய உணவுப் பொட்டலங்கள் வழங்கப்படுகின்றன.

தொற்றாளா்கள் தனிமைப்படுத்தப்பட்ட வீட்டு வாசல் முன் உணவுப் பொட்டலங்கள் வைக்கப்பட்டு, அவா்களுக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது. அவா்கள் வந்து உணவை எடுத்துக் கொள்கின்றனா்.

உணவுத் தேவைக்கு தொடா்பு கொள்ளலாம்:

விழுப்புரத்தில் முதல் கட்டமாக 30 பேருக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தேவை அதிகரித்தால் 300 முதல் 500 போ் வரைக்கும் சமைத்துக் கொடுக்க முடியும் என்று ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதியின் நிா்வாகி காந்தி தெரிவித்தாா்.

மதிய உணவு தேவைப்படும், தனிமைபடுத்தப்பட்ட விழுப்புரத்தைச் சோ்ந்த கரோனா தொற்றாளா்கள் 87789 75579, 99523 28272, 94432 49567 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் அழைத்து பதிவு செய்யலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com