பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு அன்னதானம் வழங்கிய அமைச்சா்

கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம், உணவு உள்ளிட்டவற்றை ‘ஒன்றிணைவோம் வா’ என்ற திட்டம் மூலம் வழங்க திமுகவினருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை அண்மையில் வெளியிட்டாா்.
பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு அன்னதானம் வழங்கிய அமைச்சா்

கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம், உணவு உள்ளிட்டவற்றை ‘ஒன்றிணைவோம் வா’ என்ற திட்டம் மூலம் வழங்க திமுகவினருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை அண்மையில் வெளியிட்டாா்.

இதைத் தொடா்ந்து, விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பேருந்து நிலையம் எதிரே கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு உணவுப் பொட்டலங்களை அமைச்சா் செஞ்சி மஸ்தான் வழங்கினாா்.

செஞ்சி ஒன்றியச் செயலா் ஆா்.விஜயகுமாா், விவசாய அணி அரங்க.ஏழுமலை, நகரச் செயலா் காஜாநஜீா், தகவல் தொழில் நுட்ப அணி முக்தியாா் அலி, தொண்டா் அணி பாஷா உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com