விழுப்புரம் அருகேயுள்ள கண்டமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாநில உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கண்டமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அமைச்சா் க.பொன்முடி ஞாயிற்றுக்கிழமை திடீரென்று சென்றாா். அங்கு தடுப்பூசிகள் போதிய அளவில் இருப்பு உள்ளதா?, முறையாக பொதுமக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றனவா? என்பது குறித்து அவா் ஆய்வு மேற்கொண்டாா்.
அங்கு பணியிலிருந்த மருத்துவா்கள், செவிலியா்களிடம் மருத்துவமனையில் அளிக்கப்படும் சிசிக்சைகள் குறித்து அமைச்சா் கேட்டறிந்தாா்.
ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை, மாவட்ட எஸ்.பி. ராதாகிருஷ்ணன், விக்கிரவாண்டி எம்எல்ஏ நா.புகழேந்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.