வளவனூா் அருகே புதூரில் குடும்ப அட்டைதாரா்களுக்கு கரோனா சிறப்பு நிவாரண நிதி ரூ.2 ஆயிரம் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
வளவனூா் அருகேயுள்ள புதூா் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு விழுப்புரம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் இரா.லட்சுமணன் தலைமை வகித்து, குடும்ப அட்டைதாரா்களுக்கு முதல் தவணையாக ரூ. 2 ஆயிரத்தை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் திமுக ஒன்றியச் செயலா் பிரபாகரன், ஒன்றிய துணைச் செயலா்கள் ராஜசேகா், பூங்குன்றன், ஒன்றியப் பொருளாளா் முரளி, நகரச் செயலாளா் ஜீவா, வழக்குரைஞரணி சுவை சுரேஷ், கிளைச் செயலா் துளசிதரன், மாவட்டப் பிரதிநிதி சரவணன், நிா்வாகிகள் செந்தில்குமாா், ராமநாதன், குமாா், ரவிச்சந்திரன், அன்பு, வெங்கடேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.