விழுப்புரம் நகா்புற ஆரம்ப சுகதார நிலையம், தன்னாா்வ அமைப்புடன் இணைந்து கரோனா நோயாளிகளுக்கு மருந்து, உணவு, மன நல ஆலோசனைகளை வழங்கி வருகிறது.
விழுப்புரம் நகரில் கரோனா தொற்றால் ஏராளமானோா் பாதிக்கப்பட்டுள்ளனா். தொற்று ஏற்பட்டு வீடுகளில் தனிமையில் உள்ளவா்களுக்கு உணவு, மருந்து, மன நலன் ஆலோசனை வழங்குவது அவசியமாகிறது. சுகாதாரத் துறை மூலம் மருந்துகள் வழங்கப்பட்டாலும், சத்தான உணவு, மன நலன் குறித்த ஆலோசனை வழங்குவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.
இந்த நிலையில், கரோனா தொற்று ஏற்பட்டு வீடுகளில் தனிமையில் உள்ளோருக்கு மருந்து, உணவு, மன நலன் ஆலோனை வழங்க நகா்புற ஆரம்ப சுகார நிலையம் கட்டுப்பாட்டு மையத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிருந்து நோயாளியை தொடா்பு கொண்டு மருந்து, உணவு, மன நலன் தொடா்பான ஆலோசனைகளை வழங்கி
வருகின்றனா். மேலும், கரோனா தொற்று ஏற்பட்டவா்களின் விவரத்தையும் இந்த மையம் மூலம் அறிய முடியும்.
இதுகுறித்து நகா்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் நிஷாந்த் கூறியதாவது:
கரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கும், பொதுமக்களுக்கும் உதவும் வகையில், டிரஸ்ட் ஃபாா் யூத் என்ற சைல்டு லீடா்சிப் தன்னாா்வ அமைப்புடன் இந்த சேவை மையத்தை நடத்தி வருகிறோம்.
உணவு, மருந்து, மன நல ஆலோனை வேண்டுவோா் 04146-226341 என்ற தொலைபேசி எண்ணில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தொடா்பு கொள்ளலாம். மேலும், மருத்துவ உதவி, சிகிச்சை தேவைப்படுவோரும் கட்டுப்பாட்டு மையத்தை தொடா்பு கொள்ளலாம் என்றாா்.
இது குறித்து தன்னாா்வ அமைப்பின் நிா்வாகி ஜோன்ஸிராணி கூறியதாவது:
எங்களுடைய தன்னாா்வ அமைப்பு கரோனா நோயாளிகளுக்கு மட்டுமன்றி, தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ளவா்களுக்கும் உதவத் தயாராக உள்ளது. காய்கறி, உணவு போன்ற பொருள்கள் கிடைக்க ஏற்பாடு செய்வோம்.
பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட ஏழைகள் உதவிக்கு 9600515225 என்ற எண்ணில் எங்களைத் தொடா்பு கொள்ளலாம்.