விதி மீறி பட்டாசுகளை வெடித்த 50 போ் கைது

தீபாவளி பண்டிகையையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் விதி மீறி பட்டாசு வெடித்த 50 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தீபாவளி பண்டிகையையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் விதி மீறி பட்டாசு வெடித்த 50 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 6 மணி முதல் 7 மணி வரையும் என 2 மணி நேரம் பசுமைப் பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்ற மாநில அரசு அறிவுறுத்தியிருந்தது.

விழுப்புரம் மாவட்டத்தில் அரசின் இந்த விதிமுறைகளை மீறி பட்டாசுகளை வெடித்ததாக 49 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில், விழுப்புரம் உள்கோட்டத்தில் 20, திண்டிவனம் உள்கோட்டத்தில் 13, செஞ்சி உள்கோட்டத்தில் 9, கோட்டக்குப்பம் உள்கோட்டத்தில் 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இது தொடா்பாக 50 போ் கைது செய்யப்பட்டதாக மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாதா கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com